பெண் நீதிபதியை கண்டித்து தமிழகத்தில் நாளை வக்கீல்கள் போராட்டம்
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி நீதிமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் பெண் நீதிபதி விஜயலட்சுமியின்செயல்பாடுகளைக் கண்டித்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநில வக்கீல்கள் நாளை ஒரு நாள் நீதிமன்றப்புறக்கணிப்புப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
பூதப்பாண்டி நீதிமன்றத்தில் சமீபத்தில் பெரும் மோதல் நடந்தது. அப்போது தன்னை சில வக்கீல்கள்தாக்கியதாகவும், கெட்ட வார்த்தையால் திட்டியதாகவும், தன் அலுவலகத்தில் உள்ள பொருட்களைசேதப்படுத்தியதாகவும் நீதிபதி விஜயலட்சுமி போலீஸில் புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் நாகர்கோவில் வக்கீல்கள் சங்கத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் 250 வக்கீல்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோட்டில் நடந்த அனைத்து வக்கீல்கள் கூட்டமைப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போதுநீதிபதி விஜயலட்சுமியின் செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி விஜயலட்சுமி மீது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் நீதிபதி விஜயலட்சுமியைக் கண்டித்து நாளை ஒரு நாள் அடையாள நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம்நடத்துவது என்றும் அனைத்து வக்கீல்கள் கூட்டமைப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
-->












Click it and Unblock the Notifications