மதிமுக பிரமுகரை நீக்கிய விவகாரம்: வைகோவுக்கு நெல்லை கோர்ட் நோட்டீஸ்
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்ட மதிமுக செயலாளரை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கியது தொடர்பாகதொடரப்பட்டுள்ள வழக்கில், அக்கட்சியின் பொதுச் செயலாளரான வைகோ மற்றும் அவைத் தலைவரான எல்.கணேசன் ஆகியோருக்கு திருநெல்வேலி கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட மதிமுக செயலாளராக இருந்தவர் இலக்குவன். சாத்தான்குளம் இடைத் தேர்தலை மதிமுகபுறக்கணிக்கும் என்று கணேசன் சில நாட்களுக்க முன் அறிவித்திருந்தார்.
இதையடுத்து கணேசனைக் கடுமையாக விமர்சித்து அறிக்கை விட்டிருந்தார் இலக்குவன். இதைத் தொடர்ந்துஅவரைக் கட்சியிலிருந்து நீக்க வைகோ உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து இலக்குவன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் தன் மனுவில்,
என்னைக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு முன், கட்சியின் சட்ட விதிமுறைகள் சரிவரக் கடைப்பிடிக்கப்படவில்லை.சிறையில் இருக்கும் வைகோ என்னை நீக்க முடியாது.
எனவே என்னை நீக்கியது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தன் மனுவில் கூறியிருந்தார் இலக்குவன்.
இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி வைகோ மற்றும் கணேசனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம்உத்தரவிட்டது.
-->