நெல்லையை நனைத்த கன மழை: சென்னையை கொளுத்தும் வெயில்
திருநெல்வேலி:
திருநெல்வலி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
பிப்ரவரி மாதத் தொடக்கத்திலிருந்தே திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நல்ல மழைபெய்து வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலியிலும் அதன் சுற்றுப் புறத்திலும் நேற்று பலத்த மழை பெய்தது.
நேற்று காலை முதல் மதியம் வரை விட்டுவிட்டு இந்த மழை பெய்தது. இதனால் கோடைக் கால தொடக்கத்தின்சூட்டை மறந்து அவ்வூர் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.
சென்னையை கொளுத்தும் வெயில்:
இதற்கிடையே சென்னை நகரில் வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது.
கோடைக் காலத்தின் தொடக்கத்தைக் கட்டியம் கூறும் வகையில் சுள்ளென்று வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் மழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மடிப்பாக்கம், வேளச்சேரி,அம்பத்தூர் உள்ளிட்ட சில பகுதிகளில் இத்தனை நாட்களாகத் தேங்கி நின்ற மழை நீர் தற்போது காயத்தொடங்கியுள்ளது.
-->