மதுரை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை:
சென்னையிலிருந்து மதுரைக்கும், நாகர்கோவிலுக்கும் இந்த வார இறுதியில் சிறப்பு ரயில்களை இயக்க தெற்குரயில்வே முடிவு செய்துள்ளது.
சென்னை-எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (நாளை) இரவு 10 மணிக்கு மதுரை சிறப்பு ரயில் கிளம்பும். அடுத்தநாள் காலை 7 மணிக்கு அது மதுரை சென்றடையும்.
மறு மார்க்கத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு 8.40 மணிக்கு மதுரையிலிருந்து சிறப்பு ரயில் கிளம்பி, அடுத்த நாள்காலை 6 மணிக்கு சென்னை வந்தடையும்.
சென்னைக்கும், நாகர்கோவிலுக்கும் இடையிலான சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குசென்னையை விட்டுக் கிளம்பும். அடுத்த நாள் பிற்பகல் 12.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
மறு மார்க்கத்தில், திங்கள்கிழமை மாலை 3.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து கிளம்பும் சென்னை சிறப்பு ரயில்,அடுத்த நாள் காலை 6.30 மணிக்கு சென்னை வந்தடையும்.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
-->












Click it and Unblock the Notifications