ஊட்டி, குன்னூரில் 427 திருட்டு வி.சி.டிக்கள் பறிமுதல்
ஊட்டி:
ஊட்டி மற்றும் குன்னூரில் உள்ள வீடியோ கடைகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனைகளில் 427 திருட்டுவி.சி.டிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சமீபத்தில் வெளியான திரைப்படங்களின் வி.சி.டிக்களின் நடமாட்டம் ஊட்டியில் அதிகரித்திருப்பதாகப்போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஊட்டியில் உள்ள இரண்டு கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி 81 திருட்டுவி.சி.டிக்களைக் கைப்பற்றினர்.
நீலகிரி மாவட்டம் முழுவதும் இந்தத் திருட்டு வி.சி.டிக்களை உலவ விட்ட அந்த இரண்டு வீடியோகடைக்காரர்களையும் போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஊட்டியில் இதுபோன்ற சோதனை நடத்தப்படுவது இதுதான் முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் குன்னூரில் நடந்த மற்றொரு சோதனையில் 346 தமிழ், இந்தி மற்றும் ஆங்கில திருட்டு வி.சி.டிக்கள்கைப்பற்றப்பட்டன.
11,900 பாட்டில் சாராயம் அழிப்பு:
இதற்கிடையே கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கைப்பற்றப்பட்ட சுமார் 11,900பாட்டில் சாராயத்தை போலீசார் அழித்தனர்.
கடந்த 1996ம் ஆண்டு கர்நாடகா மற்றும் கேரளாவுக்குக் கடத்தப்படவிருந்த இந்த சாராய பாட்டில்களைப்பொள்ளாச்சி அருகே உள்ள சோழப்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு கிட்டங்கியில் போலீசார் கைப்பற்றினர்.
ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இது தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இதனால் அந்த பாட்டில்களில் உள்ள சாராயம் விஷத் தன்மையாக மாறிவிடும் என்ற அபாயம் இருப்பதால்,எச்சரிக்கையுடன் அதை அழித்து விட்டு காலியான பாட்டில்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு பொள்ளாச்சிநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்திற்குப் பின்புறம் பெரிய குழியைத் தோண்டி, அதில் 11,900பாட்டில் சாராயத்தையும் போலீசார் ஊற்றி அழித்தனர். இந்த சாராயத்தின் மதிப்பு சுமார் ரூ.15.5 லட்சமாகும்.பின்னர் காலி பாட்டில்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
-->