கட்டிய மனைவியையே விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர்
நாகர்கோவில்:
கட்டிய மனைவியையே விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவரைப் போலீசார் கைது செய்தனர். மேலும்அந்தப் பெண் உள்பட விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 பெண்கள், ஒரு கார் டிரைவர் மற்றும் ஒருஏஜெண்ட் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவைச் சேர்ந்தவர் ஜக்காயா. இவர் பெண்களை அழைத்து வந்து நாகர்கோவிலில் வீடு பிடித்துஅவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தார். இது குறித்த தகவல் கிடைத்ததும் ஜக்காயாவைப்பிடிக்க போலீஸார் வலை விரித்தனர்.
இதையடுத்து ஜக்காயா விபச்சாரத்திற்குப் பயன்படுத்திய வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 5 பெண்கள் பிடிபட்டனர்.
அவர்களுக்கு வாடிக்கையாளர்களைப் பிடித்துக் கொடுத்ததாக ஜக்காயா, கார் டிரைவர் மற்றும் ஒருஏஜெண்ட் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து ரூ.9,000 பணம், செல் போன்கள், ஒரு கார் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட பெண்களில் மூன்று பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.இரண்டு பேர் பரோடாவைச் சேர்ந்தவர்கள்.
மேலும் இந்த விபச்சாரப் பெண்களில் ஒருவர் ஜக்காயாவின் மனைவி என்பதை அறிந்ததும்போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
-->












Click it and Unblock the Notifications