For Daily Alerts
Just In
சாலை விபத்தில் இறந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு ஜெ. நிதியுதவி
சென்னை:
இரு வேறு சாலை விபத்துக்களில் இறந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் கூத்தக்குடி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் நான்கு பெண்கள் உள்பட ஏழு பேர்பலியாயினர். அதேபோல உளுந்தூர்ப்பேட்டை சாலை விபத்தில் மூன்று பெண்கள் உள்பட நான்குபேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் பலியான 11 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.50,000 நிதியுதவி அளிக்கஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் இவ்விபத்துக்களில் காயமடைந்த 10 பேரில், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலாரூ.15,000 நிதி மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.6,000 நிதியுதவி வழங்கவும்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
Comments
Story first published: Monday, February 17, 2003, 5:30 [IST]