For Quick Alerts
For Daily Alerts
Just In
"செக்ஸ்" சாமியார் பிரேமானந்தாவுக்கு பரோல்
புதுக்கோட்டை:
இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுள் "செக்ஸ்" சாமியார் பிரேமானந்தா, 6 நாள் பரோலில்விடுதலையாகியுள்ளார்.
கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்பிரேமானந்தா.
இந்நிலையில் தனது ஆசிரமத்திற்குச் செல்ல விரும்புவதாகவும், எனவே தன்னைப் பரோலிலில்விடுவிக்க வேண்டும் என்றும் கோரி புதுக்கோட்டை செஷன்ஸ் நீதிமன்றத்தில் பிரேமானந்தா மனுதாக்கல் செய்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி ரத்தினவேலு பிப்ரவரி 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஆறுநாட்களுக்கு அவரைப் பரோலில் செல்ல அனுமதி அளித்தார்.
அந்த நாட்களில் விராலிமலை அருகே உள்ள பாத்திமா நகரில் உள்ள ஆசிரமத்திற்கு மட்டுமேபிரேமானந்தா செல்ல வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
இதையடுத்து பரோலில் விடுதலையாகி வெளியே வந்தார் பிரேமானந்தா.
-->
Comments
Story first published: Tuesday, February 18, 2003, 5:30 [IST]