தண்டனை காலம் முடிந்த பின் பிடிபட்ட ஆயுள் கைதி!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் 12 ஆண்டுகளுக்கு முன் தப்பிய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி இப்போதுபிடிபட்டுள்ளார்.

மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கருப்பையா மற்றும் தூர் கரும்பு. இருவரும் கடந்த1989ம் ஆண்டு அவனியாபுரத்தைச் சேர்ந்த பாக்கியம் என்பவரைக் கொலை செய்ததாகக் கைதுசெய்யப்பட்டனர். மதுரை நீதிமன்றத்தில் அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டது.

இருவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல்செய்தனர். இன்னொரு கொலை வழக்கிலும் சிக்கியிருந்ததால், தூர் கரும்பு மதுரை மத்தியசிறையிலேயே மீண்டும் அடைக்கப்பட்டார். கருப்பையா ஜாமீனில் விடுதலையாகி இருந்தார்.

இதற்கிடையே இருவர் மீதான ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து கருப்பையா தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் மதுரை-விராட்டிபத்து பகுதியில் கருப்பையா வசித்து வருவதாக அவனியாபுரம்போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீஸார்கருப்பையாவைக் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு தலைமறைவாகி விட்டு தண்டனைக் காலம் முடியும்நிலையில் பிடிபட்டுள்ள கருப்பையாவின் நிலை பரிதாபமானதுதான்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+