இன்னொரு அயோத்தி: இம்முறை மத்தியப் பிரதேசத்தில்..

Subscribe to Oneindia Tamil

தர்: (மத்தியப் பிரதேசம்)

அயோத்தி விவகாரத்தைப் போலவே மத்தியப் பிரதேசத்திலும் ஒரு பிரச்சனை கிளப்பப்பட்டுள்ளது.

இங்கு பல ஆண்டு காலமாக மூடப்பட்டு கிடக்கும் ஒரு பிரச்சனைக்குரிய வழிபாட்டுத் தலத்தை இந்து ஜார்கன்மன்ச் மற்றும் பா.ஜ.கவின் சுதேசி ஜார்கன் மன்ச் அமைப்பினர் இன்று பூட்டுக்களை உடைத்து திறக்க முயன்றனர்.ஆனால், போலீசார் அவர்களைத் தடுத்து விரட்டியடித்தனர்.

இது தொடர்பாக 40 பெண்கள் உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில்இச் சம்பவம் நடந்துள்ளது.

இந்துக்களால் போஞ்ச்சாலா கோவில் என்றும் இஸ்லாமியர்களால் கமால மெளலா பள்ளிவாசல் என்றும் இந்தவழிபாட்டுக் தலம் அழைக்கப்படுகிறது. இது யாருக்குச் சொந்தம் என்பதில் பிரச்சனை இருப்பதால் இந்தத் தலம்பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று காலை பா.ஜ.கவின் சுதேசி ஜார்கன் மன்ச் மற்றும் இந்து ஜார்கன் மன்ச் ஆகியஅமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தத் தலத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை பாதுகாப்புக்குஇருந்த போலீசார் தடுத்தபோது அவர்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர்.

இதில் பல போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து போலீடார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தினரைகலைந்து ஓடச் செய்தனர்.

இச் சம்பவத்தையடுத்து இந்தத் தலத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு பெரும் அளவிலான போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று இந்தத் தலத்தைக் கைப்பற்றப் போவதாக இந்து ஜார்கன் மன்ச் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனால்பெரும் வன்முறை வெடிக்கலாம் என்ற அச்சத்தில் இந்த சிறிய நகரில் அனைத்துப் பள்ளிகளும் கல்லூரிகளும்மூடப்பட்டிருந்தன. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+