கத்தி, துப்பாக்கிகளுடன் தியேட்டரில் நுழைந்த 7 பேர்: தீவிரவாதிகளா?
சென்னை:
சென்னை அபிராமி தியேட்டர் வளாகத்திற்குள் துப்பாக்கிகள், கத்திகளுடன் அத்துமீறி நுழையமுயன்ற 7 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை புரசைவாக்கத்தில் அபிராமி தியேட்டர் காம்ப்ளக்ஸ் உள்ளது. இங்கு போர்ட் காரில் ஏழுபேர் கொண்ட கும்பல் வந்தது.
பின்னர் அந்த ஏழு பேரும் "திமுதிமு"வென்று தியேட்டருக்குள் நுழைய முயன்றனர். ஆனால் உரியடிக்கெட்டுகள் இல்லாமல் அவர்கள் நுழைய முயன்றதால் தியேட்டர் காவலர்கள் அவர்களை உள்ளேஅனுமதிக்க மறுத்தனர்.
அதையும் மீறி அவர்கள் பிடிவாதமாக தியேட்டருக்குள் நுழைய முயன்றனர். ஆனால் காவலர்கள்வலுக்கட்டாயமாக அவர்களைத் தடுத்து நிறுத்தினர். பொது மக்கள் உதவியால் சுற்றி வளைத்தனர்.
உடனே, போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் ஏழு பேரையும்கைது செய்தனர். அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்தக் காரை சோதனை செய்து பார்த்தபோது கத்திகள், துப்பாக்கிகள் இருந்தன. இதையடுத்துஅவர்களிடம் தீவிர விசாரணைை நடத்தப்பட்டு வருகிறது.
பிடிபட்ட ஏழு பேரும் தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து போலீஸார் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-->












Click it and Unblock the Notifications