பஸ் ஸ்டாண்டில் "குவா குவா"
சென்னை:
சென்னை வடபழனி பஸ் நிலையத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவித்தார். பஸ் நிலையத்தில் இருந்த பெண்களின்உதவியுடன் அழகான பெண் குழந்யைைப் பெற்றெடுத்தார் அந்தப் பெண்.
நேற்று காலை 10 மணியளவில் ஒரு கர்ப்பிணிப் பெண் வடபழனி பஸ் நிலையத்திற்கு பஸ் ஏறுவதற்காக வந்தார்.அப்போது திடீரென்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பெண்ணை மருத்துவமனைகொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்தன.
ஆனால், அதற்குள் அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்து விட்டது. அங்கிருந்த பெண் பயணிகள் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். பின்னர் தாயும், சேயும் அருகில் இருந்த மாநகராட்சி மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர். இருவரும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பஸ் நிலையத்தில் அந்தப் பெண் குழந்தை பிறந்ததால் அதற்கு பல்லவி (பல்லவனின் பெண்பால் பெயர்) என்று பெயர்வைக்குமாறு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் குழந்தையின் தாயிடம் கோரிக்கை வைத்தனர்.
-->