அப்துல் கலாம் வருகை: கோவை பந்த் ஒத்திவைப்பு
சென்னை:
ஜனாதிபதி அப்துல் கலாம் நாளை (20ம் தேதி) தமிழகம் வருகிறார். வெள்ளிக்கிழமை அவர் கோயம்புத்தூர்வருவதால் அங்கு நாளை நடத்தப்பட இருந்த பந்த் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பவானி விவகாரத்தில் தமிழக விவசாயிகளை கேரள போலீசாரும் ரெளடிகளும் தாக்கியதைக் கண்டித்து நாளைகோவை மற்றும் ஈரோட்டில் பந்த் நடத்த அனைத்துக் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் திட்டமிட்டிருந்தன.
ஆனால், நாளை மறுதினம் (21ம் தேதி) அப்துல் கலாம் கோவை வருவதால் நாளை நடக்க இருந்த பந்த்தை ஒத்திவைக்க அனைத்துக் கட்சிகளும் முடிவு செய்துள்ளன. அதே நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் திட்டமிட்டபடிநாளை பந்த் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் குடிசை வாழ் சிறுவர்களுக்கான கண் சிகிச்சை திட்டத்தை அவர் தொடங்கி வைக்க இருக்கிறார்.
இதற்காக அப்துல்கலாம் (நாளை) சென்னை வருகிறார். இரவு 10.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்துஇறங்கும் கலாம் ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு அவர் ஹெலிகாப்டர்மூலம் பாண்டிச்சேரி செல்கிறார். பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அதன் பிறகு, பாண்டிச்சேரியின் அமைக்கப்பட்டுள்ள அரவிந்த் கண் மருத்துவமனையின் புதிய கிளையை கலாம்திறந்து வைக்கிறார்.
பின்னர் பிற்பகல் 2 மணிக்கு திருப்பூர் செல்கிறார். பின்னலாடைத் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பின்வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கிருந்து கோவை செல்கிறார். இந்தியத் தொழிலகங்களின்கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்.
அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் கோவை கே.ஜி. கண் மருத்துவமனைக்கு செல்கிறார். குடிசைவாழ் சிறுவர்களுக்கானஇலவச கண் மருத்துவ சேவைத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
பிறகு இரவு 8 மணிக்கு கோவையிலிருந்து டெல்லி புறப்படுவார் கலாம்.
கலாம் டெல்லி திரும்பிய பின்னர் வேறு ஒரு தேதியில் தான் கோவையில் பந்த் நடத்தப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
கலாமிடம் மனு தர நிருபர்கள் திட்டம்:
பவானியின் குறுக்கே அணை கட்டப்படுவதைப் பார்வையிடச் சென்றபோது தங்களை கேரள போலீசாரும் ரெளடிகளும் வழி மறித்துத் தாக்கியது குறித்துஅப்துல் கலாமிடம் புகார் மனு தர கோவை விவசாயிகளும் நிருபர்களும் திட்டமிட்டுள்ளனர்.
இந் நிலையில் இத் தாக்குதலைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் அனைத்துக் கட்சியினர் சார்பில் ஆர்பாட்டப் பேரணியும் நடத்தப்பட்டது.
-->












Click it and Unblock the Notifications