சட்டசபை, சத்த சபையாகி விட்டது: கருணாநிதி
சென்னை:
ஜெயலலிதா ஆட்சியில சட்டசபை கூட சத்த சபையாக மாறிவிட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் திராவிட இயக்கத்தின் 90வது ஆண்டுவிழா மற்றும் திராவிட இயக்கநிறுவனர்களில் ஒருவரான டாக்டர் நடேசனின் 66-வது நினைவு நாளையொட்டி நடந்த பொதுக் கூட்டத்தில்கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது:
சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எந்த அளவுக்கு அவமானப்படுத்தப்பட முடியுமோ அந்த அளவுக்குஅவமரியாதை செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களை, உறுப்பினர்களை அவமானப்படுத்துவதேஜெயலலிதாவின் முக்கிய வேலையாகிவிட்டது.
இப்போதையமுதல்வருக்கும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் உள்ள வேறுபாட்டைப் பாருங்கள்.எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது சட்டசபையில் அப்போதைய நிதியமைச்சர் நாஞ்சில் மனோகரன் கூறிய சிலகருத்துக்களால் அதிருப்தியடைந்த திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் எம்.ஜி.ஆர் மனோகரனின் பேச்சுக்காகமன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
இன்னொரு முறை நான் எனது மகன் அழகிரி பெயரில் மதுரையில் நிலம் வாங்கி விட்டதாகக்கூறி போலியானஆவணத்தை சட்டசபையில் தாக்கல் செய்ய அப்போதைய அமைச்சர் குழந்தைவேலு திட்டமிட்டிருந்தார்.இதையறிந்த எம்.ஜி.ஆர். அது தொடர்பான பிரச்சினை சட்டசபைக்கே வரக்கூடாது என்று உத்தரவிட்டார்.
இப்போது சட்டசபையில் என்ன நடக்கிறது. சட்டசபையை வெறும் சத்தசபையாக மாற்றிவிட்டார்கள். ஜனநாயகம்குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது. ஆளுங்கட்சி உறுப்பினர்களின் நடத்தை குறித்துப் பேச வேண்டியதேஇல்லை. அந்த அளவுக்கு அநாகரீகம் தலைவிரித்து ஆடுகிறது.
சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் குறித்தும் திமுக எம்.எல்.ஏக்கள் குறித்தும் சமீபத்தில்ஜெயலலிதா கூறிய கருத்துக்கள் அவருக்கு வேண்டுமானால் உகந்ததாக இருக்கலாம் ஆனால், அவர் வகிக்கும்பதவிக்கு உகந்தவை அல்ல என்றார் கருணாநிதி.
-->












Click it and Unblock the Notifications