என் உயிருக்கு விலை பேசுகின்றனர்: ஜெ. சொத்து குறித்து விசாரித்த அதிகாரி அச்சம்
சென்னை:
எனது உயிருக்கு அரசியல்வாதிகள் விலை பேசி வருகின்றனர் என முதல்வர் ஜெயலலிதாவின் மீதான லஞ்ச- ஊழல் வழக்கை விசாரித்தஅதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வருமானத்தை மீறி முதல்வர் ஜெயலலிதா ரூ. 62 கோடி சொத்து சேர்த்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி நல்லம்ம நாயுடு.ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல் பல சாட்சிகளும் பல்டி அடித்துவிட்ட நிலையில் நாயுடு மட்டுமே தனது நிலையில்நேர்மையாக உள்ளார்.
அவர் ஜெயலலிதாவிடம் நடத்தப்பட்ட விசாரணைகள், வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு, பிடிபட்ட பணம், நகைகள், ஆவணங்கள் ஆகியவிவரங்களை தைரியமாக நீதிமன்றத்தில் கூறி வருகிறார். இதனால் அவருக்கு அதிமுகவினரிடம் இருந்து தொடர்ந்து கொலை மிரட்டல்கள்வந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
ஆனாலும் தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல் அவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து வருகிறார். தனி நீதிமன்றத்தில் நீதிபதிராஜமாணிக்கம் முன் அவர் சாட்சியம் அளித்தபோது ஜெயலலிதாவின் வக்கீலும் அதிமுக எம்.பியுமான ஜோதி அவரை குறுக்கு விசாரணைசெய்தார்.
அதன் விவரம்:
ஜோதி: ஜெயலலிதா வீட்டில் ரெய்ட் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்களை பத்திரிக்கைகளுக்கு கொடுத்தீர்களா?
நல்லம்ம நாயுடு: இல்லை
ஜோதி: நீங்கள் படங்களைத் தந்துள்ளீர்கள். அவை வெளியாகியுள்ளன. எங்களிடமும் கட்சி இருக்கிறது. இது தொடர்பான விவரங்கள்எங்களிடம் உள்ளன.
நாயுடு: அரசியல் கட்சிக்கும் எனக்கும் என்ன தொடர்பு? உங்களுக்கு கட்சி இருப்பதை ஏன் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?உங்கள் பேச்சு வேதனை தருகிறது.
ஜோதி: (நீங்கள் விசாரணை நடத்தியபோது) ஜெயலலிதா எவ்வளவு வேதைனப்பட்டிருப்பார். அப்போது நீங்கள் மட்டும் மகிழ்ச்சியாகஇருந்தீர்கள், இப்போது வேதனைப்படுகிறீர்கள்.
நாயுடு: இந்த தரித்திரம் பிடித்த வாழ்க்கை எடுத்த பிறகு எனக்கு மகிழ்ச்சியும் கிடையாது. கத்திரிக்காயும் கிடையாது. அரசியல்வாதிகள்எனது உயிரை விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். என் மருத்துவ செலவுகள் தொடர்பான விவரங்களைக் கூட வக்கீல் ஜோதிகுறிப்பிடுகிறார். இதனால் என் தொடர்பான அனைத்து விவரங்களையும் திரட்டியிருப்பது தெரிகிறது. இது எனக்கு பயத்தையும் பலசந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
இதன் பிறகு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலும், அவரது ஆந்திர திராட்சைத் தோட்டங்களிலும் நடந்த விசாரணைகள் கிடைத்தநகைகள், சொத்துப் பத்திரங்கள் குறித்து நாயுடு விளக்கினார்.
-->












Click it and Unblock the Notifications