பொடா: நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு
டெல்லி:
பொடா சட்டத்துக்கு எதிராக இன்று மாநிலங்களைவில் கடும் அமளி ஏற்பட்டது.
தமிழகத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் இந்தச் சட்டம் மிகவும் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறி சமாஜ்வாடிக் கட்சித் தலைவர்முலாயம் சிங் யாதவ் நேற்று பிரச்சனையைக் கிளப்பினார்.
இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் உள்நாட்டுப் போர் மூளும் என்று அவர் கூறினார். இதை பல திர்க் கட்சியினரும் ஆதரித்துப்பேசினர். இதற்கு இன்று பதிலளித்துப் பேசிய துணைப் பிரதமர் அத்வானி, உத்தரப் பிரதேசத்தில் பொடா சட்டம் தவறாகப்பயன்படுத்தப்படவில்லை. தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை நீதிமன்றம் சொல்லட்டும் என்றார்.
அத்வானியின் இந்த பதிலால் எரிச்சலுற்ற எதிர்க் கட்சியினர் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். போட்டிக்கு பா.ஜ.கவினரும் கோஷம்போட பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொடா சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.
உ.பியில் தனது ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற ஒரு எம்.எல்.ஏவை பொடாவில் உள்ளே தள்ளியிருக்கிறார் அம் மாநில முதல்வர் மாயாவதிஎன்பது நினைவுகூறத்தக்கது.
மக்களவையிலும் கூச்சல்:
இதே போல லாபத்தில் இயங்கும் அரசுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து இன்றுமக்களவையிலும் எதிர்க் கட்சிகள் போராட்டத்தில் இறங்கின. இதையடுத்து அங்கும் பெரும் கூச்சல்- குழப்பம் நிலவியது.
-->












Click it and Unblock the Notifications