For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அயோத்தி: ஓட்டு வேட்டையாடும் அரசியல்வாதிகள்- சங்கராச்சாரியார் கோபம்

By Staff
Google Oneindia Tamil News

விஜயவாடா:

வரவிருக்கும் தேர்தல்களை மனதில் வைத்துக் கொண்டுதான் அரசியல்வாதிகள் அயோத்திவிவகாரத்தைக் கிளறுகிறார்கள் என்று காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்கோபத்துடன் கூறியுள்ளார்.

சமீபத்தில் டெல்லி சென்ற சங்கராச்சாரியார் ஜனாதிபதி டாக்டர் கலாம், பிரதமர் வாஜ்பாய்ஆகியோருடன் அயோத்தி பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நிலப் பகுதியை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பிடம்ஒப்படைக்க மத்திய அரசு முயன்று வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றையும்மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

இதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கடும் அமளியில் இறங்கியுள்ளன. வரும் 26ம்தேதி அயோத்தி விவகாரம் தொடர்பாக முழு விவாதமும் நடக்க உள்ளது.

இந் நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இன்று நிருபர்களிடம் சங்கராச்சாரியார்கூறுகையில்,

அரசியல்வாதிகள் தலையீடு காரணமாகத்தான் அங்கு ராமர் கோவில் கட்டும் பணிகளில் தொடர்ந்துதாமதம் ஏற்பட்டு வருகிறது.

எப்படியாவது ஓட்டுக்களை அள்ளிக் குவித்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான்அயோத்தி விவகாரத்தை அரசியல்வாதிகள் கையில் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இந்த முறை எப்படியும் அயோத்தி பிரச்சனை சுமூகமாகவும் விரைவிலும் தீர்ந்து விடும்என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் நான் இந்த விவகாரத்திலேயேதலையிட்டிருக்கவே மாட்டேன் என்றார் காஞ்சி சங்கராச்சாரியார்.

இதற்கிடையே நிலத்தை விஸ்வ ஹிந்து பரிஷத்திடம் ஒப்படைப்பது தொடர்பாக மத்திய அரசுதாக்கல் செய்துள்ள வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பாபர் மசூதி கமிட்டிகோரிக்கை விடுத்தது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இதனால் இந்த வழக்கில் அனைத்துத் தரப்பினரின் கருத்தையும் உச்ச நீதிமன்றம் கேட்கும் என்றுதெரிகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X