குழந்தைகளை பிச்சையெடுக்க தூண்டினால் 2 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

ஊட்டி:

குழந்தைகளைப் பிச்சையெடுக்கத் தூண்டுபவர்களுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கவகை செய்யும் சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக சமூகநலத் துறைஇயக்குநரான சுப்ரியா சாஹு கூறினார்.

ஊட்டியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

குழந்தைகள் பிச்சையெடுப்பதைத் தவிர்ப்பதற்காகவே அவர்களுக்குத் தேவையான உணவு, உடைமற்றும் தங்கும் இடங்களை தமிழக அரசு இலவசமாக அளிக்கிறது. மேலும் அவர்களுக்குத்தேவையான கல்வியையும் அரசு அளித்து வருகிறது.

இதற்காக தமிழகம் முழுவதும் தற்போது 25 காப்பகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் சுமார்5,500 சிறுவர், சிறுமிகள் உள்ளனர்.

இவ்வாறு அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்நிலையில் குழந்தைகள் பிச்சையெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர்களைப் பிச்சைஎடுக்கும்படி தூண்டுவது சமூக விரோதச் செயலாகும்.

இவ்வாறு குழந்தைகளைப் பிச்சை எடுக்கத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து,அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும்.

18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள் பிச்சை எடுப்பதைத் தடை செய்யும் சட்டம் சென்னைமாகாணமாக தமிழகம் இருந்தபோதே கொண்டுவரப்பட்டது. ஆனால் அது அமல்படுத்தப்படாமலேஇருந்து வந்தது.

எனவே தற்போது இந்தச் சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்த தற்போதைய தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. வரும் மார்ச் மாதம் இந்தச் சட்டம் முதல் கட்டமாக சென்னையில் அமல்படுத்தப்படும்என்றார் சுப்ரியா சாஹு.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+