For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கள்ள நோட்டு புழக்கம்: சென்னையில் 4 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் கள்ள ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில் விட்ட 4 பேரைப் போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.70 லட்சத்திற்கான கள்ள நோட்டுக்களும் பறிமுதல்செய்யப்பட்டன.

வடபழனி, தி. நகர் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளிலும் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில்இருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து இது தொடர்பாகப் போலீசார் தனிப்படை அமைத்து கள்ள நோட்டுக்களைப்புழக்கத்தில் விடுபவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று இரவு வால்டாக்ஸ் சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு பேர்நடமாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பிடித்து போலீசார் சோதனையிட்டபோது, அவர்கள் இருவரிடமும் ரூ.100 மற்றும்ரூ.50க்கான கள்ள நோட்டுக்கள் கத்தை கத்தையாக இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சங்கர் மற்றும் நாராயணன் ஆகிய அந்த இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து,அவர்கள் வைத்திருந்த கள்ள ரூபாய் நோட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.

அந்த இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் தி. நகரில் ஒரு வீட்டைப் போலீசார்சோதனையிட்டதில் அங்கும் ஏராளமான கள்ள ரூபாய் நோட்டுக்கள் இருப்பது தெரிய வந்தது.அனைத்தும் ரூ.100 மற்றும் ரூ.50 கள்ள நோட்டுக்கள் ஆகும். அந்த வீட்டிலிருந்த இரண்டுபேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த நான்கு பேரிடமிருந்தும் நேற்று ரூ.1.70 லட்சம் மதிப்பு கள்ள ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் இன்று நிருபர்களிடம்தெரிவித்தார்.

மேலும், சென்னையில் கடந்த சில நாட்களாக ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்டுவைத்திருப்பவர்களைக் குறிவைத்து, அவர்களைத் தாக்கி பணம் பறித்து வந்த நிஜாமுதீன் என்பவன்உள்பட மூன்று பேரைக் கைது செய்துள்ளதாகவும், மேலும் சிலரைத் தேடி வருவதாகவும்விஜயகுமார் கூறினார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X