திருப்பத்தூர் அருகே பட்டாசுகள் வெடித்து 2 பேர் உடல் சிதறி பலி

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டாசுத் தயாரிப்புத் தொழிற்சாலையில் பட்டாசுகள்வெடித்துச் சிதறியதில் 2 பேர் உடல் கருகி பலியாயினர்.

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ராவுத்தம்பட்டியில் பட்டாசுத் தயாரிப்புத் தொழிற்சாலைவைத்திருந்தார். கல்யாணங்கள், கோவில் திருவிழாக்கள் ஆகியவற்றிற்கு அவர் பட்டாசுகள்தயாரித்துக் கொடுப்பது வழக்கம்.

அவரது பட்டாசுத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை பக்கத்தில் உள்ள கிட்டங்கியில்இருப்பு வைத்திருப்பது வழக்கம். அந்த கிட்டங்கியை தண்டபாணி என்பவர் காவல் காத்து வந்தார்.

இந்நிலையில் அங்கு ராஜேஷின் மகன் மகேஷ் நேற்று முன்தினம் இரவு பட்டாசுகளைத் தயாரித்துக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கிட்டங்கியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பட்டாசுபொட்டலங்களில் தீப்பிடித்து வெடிக்கத் தொடங்கியது. இதையடுத்து கிட்டங்கியும், அருகில் இருந்தபட்டாசுத் தயாரிப்புப் பிரிவும் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

இந்தப் பயங்கரமான வெடி விபத்தில் தண்டபாணியும் மகேஷும் தீயில் சிக்கி உடல் கருகிபரிதாபமாக உயிரிழந்தனர்.

தீயணைப்புப் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில்ஈடுபட்டனர். நீண்ட நேரமுயற்சிக்குப் பின்னரே தீ அணைக்கப்பட்டது. அதன் பின்னர் மகேஷ் மற்றும் தண்டபாணிஆகியோரின் கருகிய உடல்கள் மீட்கப்பட்டன.

பட்டாசு வெடித்த சப்தம் அப்பகுதியில் வெடிகுண்டு வெடித்தது போல கேட்டதாக அப்பகுதியில்உள்ளவர்கள் கூறினர்.

இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+