கலாம் வருகை: தமிழகம், புதுவையில் தீவிர பாதுகாப்பு
சென்னை:
ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் ஒரு நாள் பயணமாக இன்று இரவு சென்னை வந்து சேர்கிறார்.நாளை பாண்டிச்சேரி, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில்கலந்து கொள்கிறார்.
இன்று இரவு சென்னை வந்து சேரும் டாக்டர் கலாம், தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில்தங்குகிறார்.
பின்னர் நாளை காலை பாண்டிச்சேரிக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார் டாக்டர் கலாம். அங்குஅரவிந்தர் ஆசிரமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர், பின்னர் அரவிந்த் கண்மருத்துவமனையையும் திறந்து வைக்கிறார்.
டாக்டர் கலாமின் வருகையையொட்டி பாண்டிச்சேரி முழுவதும் போலீசார் தீவிரமான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாக அம்மாநிலக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பாண்டிச்சேரி சாலைப் போக்குவரத்தில் பல மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இதனால்மாணவ, மாணவிகள் சிரமப்பட நேரிடும் என்பதால் நாளை பாண்டிச்சேரி முழுவதும் உள்ள பள்ளிமற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு பாண்டிச்சேரியிலிருந்து கிளம்பி மாலை 4 மணிக்கு திருப்பூர் செல்லும் டாக்டர் கலாம்,அங்கு பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.அங்கு வழக்கம்போல் பள்ளி மாணவ, மாணவிகளுடனும் அவர் கலந்துரையாடவுள்ளார்.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேருகிறார் டாக்டர் கலாம். அங்கு இந்தியத்தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பின்னர் ஒரு தனியார் மருத்துவமனையில் கிராமப்புறக் குழந்தைகளுக்கான கண் பராமரிப்புத்திட்டத்தைத் தொடங்கி வைக்கும் அவர், அங்கும் பள்ளி மாணவ, மாணவிகளுடன்கலந்துரையாடுகிறார்.
அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு நாளை இரவு சுமார் 8.30 மணிக்கு சிறப்புவிமானத்தின் மூலம் கோயம்புத்தூரிலிருந்து டெல்லிக்கு செல்கிறார் டாக்டர் கலாம்.
ஜனாதிபதியின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாககோயம்புத்தூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா இன்று நிருபர்களிடம் கூறினார்.
-->












Click it and Unblock the Notifications