தலித்துகளை அவமதித்த வழக்கு: சங்கராச்சாரியார் மீதான விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை
சென்னை:
தலித் மக்களை அவமதித்துப் பேசியதாக காஞ்சி சங்கராச்சாரியார் மீது புதிய தமிழகம் பிரமுகர்தொடர்ந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சின்னக் காஞ்சிபுரம் நகரைச் சேர்ந்த புதிய தமிழகம் செயலாளரான நீலமேகம் என்பவர், தலித்மக்களை அவமதிக்கும் வகையில் சங்கராச்சாரியார் பேசியுள்ளதாகக் கூறி காஞ்சிபுரம் முதலாவதுநீதித் துறை நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதை எதிர்த்து காஞ்சி சங்கராச்சாரியார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஒரு தமிழ் நாளிதழில் கோவில் வழிபாடு தொடர்பாகநான் கூறிய கருத்துக்கள் வெளியாகியிருந்தன.
தலித் என்ற வார்த்தையை விட ஹரிஜன் என்ற பதம் சிறந்தது, உயர்வானது என்றுதான் அதில் நான்கூறியிருந்தேன். யாரையும், எந்தப் பிரிவினரையும் அவமானப்படுத்தும் வகையில் ஒரு வார்த்தைகூட நான் கூறவில்லை.
இது இந்தி தண்டனைச் சட்டம் 500வது பிரிவின்படி குற்றச் செயல் அல்ல. ஆனால்துரதிர்ஷ்டவசமாக எனக்கும், மற்றவர்களுக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விசாரணை நீதிமன்றம்சம்மன் அனுப்பியுள்ளது.
இதை ரத்து செய்து வழக்கு விசாரணையையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று சங்கராச்சாரியார்அம்மனுவில் கூறியிருந்தார்.
இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கனகராஜ், இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்குஇடைக்காலத் தடை விதித்ததோடு, நீலமேகத்திடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பவும்உத்தரவிட்டார்.
வரும் 26ம் தேதிக்குள் நோட்டீஸிற்குப் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீலமேகத்திற்கு நீதிபதிஉத்தரவிட்டார்.
-->