For Daily Alerts
Just In
சாத்தான்குளம்: கள்ள ஓட்டு போட்டால் ஓராண்டு சிறை- தேர்தல் கமிஷனர் எச்சரிக்கை
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலின்போது கள்ள ஓட்டுப் போட முயன்று பிடிபடுவோர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கிஎச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கள்ள ஓட்டுப் போட வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
கள்ள ஓட்டுப் போட முயன்று பிடிபடுவோரை உடனடியாக போலீஸில் ஒப்படைக்குமாறு வாக்குச்சாவடி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கள்ள ஓட்டுப் போட முயன்று பிடிபடுவோருக்கு ஒரு ஆண்டு வரை சிறைத் தண்டனை அல்லதுஅபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார் சாரங்கி.
-->
Comments
Story first published: Thursday, February 20, 2003, 5:30 [IST]