For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

150 கி.மீ. தூரம் நடந்த கார் கடத்தல் "கண்ணாமூச்சி"

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கீழக்கரையில் கடத்திச் செல்லப்பட்ட காரை 150 கி.மீ. தூரம் துரத்திப் பிடித்து காரைக் கடத்தியவரைசிவகங்கை மாவட்ட போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னையில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் பரமேஸ்வரன் என்பவர் காரை வாடகைக்குஎடுத்தார். உமாநாத் என்ற டிரைவர் பரமேஸ்வரனை காற்றில் ஏற்றிக் கொண்டு சென்றார். காரைராமநாதபுரத்துக்கு விடுமாறு கூறினார் பரமேஸ்வரன்.

வழியில் கீழக்கரையில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு உமாநாத் டீ சாப்பிடச் சென்றார்.அப்போது காருக்குள் அமர்ந்திருந்த பரமேஸ்வரன் திடீரென்று அந்தக் காரைக் கடத்திச் சென்றார்.

இதைப் பார்த்து பதறிப் போன உமாநாத், உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார். இதையடுத்து மாவட்டம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களுக்குத் தகவல்தரப்பட்டு உஷார்படுத்தப்பட்டது.

இந்நிலையில் காரைக் கடத்திக் கொண்டு தப்பிய பரமேஸ்வரன் ராமநாதபுரம்-சிவகங்கை மாவட்டஎல்லையை நோக்கி வந்தார். அங்கு தடுப்பு போட்டு போலீஸார் காத்திருந்தனர்.

ஆனால் தடுப்பை உடைத்துக் கொண்டு பரமேஸ்வரன் தப்பினார். போலீஸாரும் உடனே சுதாரித்துக்கொண்டு ஜீப்பில் பரமேஸ்வரனைத் துரத்தினர்.

இந்த துரத்தல் 150 கி.மீ. வரை நீடித்தது. வழியில் பல போலீஸ் தடுப்புக்களையும் பரமேஸ்வரன்உடைத்து எறிந்து கொண்டே சென்றார். ஒரு வழியாக தானிப்பட்டி என்ற இடத்தில் வைத்து காரைமடக்கினர் போலீஸார்.

பின்னர் பரமேஸ்வரன் கைது செய்யப்பட்டார். காரும் மீட்கப்பட்டது. அவரிடம் போலீஸார்தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X