ஆந்திராவில் அருவியில் குளித்த சென்னை பாலிடெக்னிக் மாணவன் நீரில் மூழ்கி சாவு
சென்னை:
ஆந்திராவுக்கு சுற்றுலா சென்ற சென்னை பாலிடெக்னிக் மாணவர் அங்குள்ள அருவியில்குளித்தபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை-கோயம்பேடு சின்மயாநகர் சேமத்தம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த பாலு என்பவரின்மகன் மணிகண்டன். 18 வயதான மணிகண்டன் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில்படித்து வந்தார்.
நேற்று விடுமுறையை முன்னிட்டு தன்னுடைய மாணவ நண்பர்கள் எட்டு பேருடன் ஆந்திர மாநிலம்பிச்சாத்தூரில் உள்ள அவந்தி நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றார்.
அனைவரும் அருவியில் சந்தோஷமாகக் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது மணிகண்டன்மட்டும் திடீரென்று அங்கு தேங்கியிருந்த நீரில் மூழ்கினார்.
உடனே மற்ற அனைவரும் சேர்ந்து மணிகண்டனை மீட்க முயற்சித்தனர். ஆனால் அவருடையஉயிரற்ற உடலை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது.
இதையடுத்து மணிகண்டனின் உடலைக் கைப்பற்றிய ஆந்திரப் போலீசார், பின்னர் அதைசென்னைக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய உயிரற்ற உடலைப் பார்த்து அவருடைய பெற்றோர்அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
-->












Click it and Unblock the Notifications