ஜெயாவின் 55வது பிறந்தநாள்: அத்வானி வாழ்த்து- அதிமுகவினர் கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய 55வது பிறந்தநாளை இன்று எளிய முறையில்கொண்டாடினார். அவருக்கு துணைப் பிரதமர் அத்வானி, தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ்ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

விவசாயிகள் தற்கொலை, வறட்சி ஆகியவற்றால் தனது பிறந்த நாள் விழாவைக் கோலாகலமாகக்கொண்டாடுவதைத் தவிர்குமாறு அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இதனால்தனது இல்லத்திலேயே இன்று மிக எளிமையான முறையில் தன்னுடைய பிறந்தநாளைக்கொண்டாடினார் ஜெயலலிதா.

அத்வானி வாழ்த்து:

இன்று காலை ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய துணைப் பிரதமர்அத்வானி, அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவருக்கு ஜெயலலிதா நன்றிதெரிவித்துக் கொண்டார்.

ஆளுநர் ராமமோகன் ராவும் ஜெயலலிதாவுக்கு தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களைத்தெரிவித்தார். மேலும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி உள்ளிட்டோரும்ஜெயலலிதாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

பிறந்தநாளை முன்னிட்டு நேற்றிரவு தான் அவர் சாத்தான்குளத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டுசென்னை திரும்பினார்.

கேக் வெட்டி கொண்டாட்டம்:

இதற்கிடையே ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில்அக்கட்சியினர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடி அமர்க்களப்படுத்தி விட்டனர்.சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சார்பில்கட்சியின் அமைப்புச் செயலாளரான விசாலாட்சி நெடுஞ்செழியன் கேக் வெட்டினார்.

நிதியமைச்சர் பொன்னையன் ஜெ. பிறந்தநாள் விழா மலரை வெளியிட்டார். அதை சட்ட அமைச்சர்ஜெயக்குமார் பெற்றுக் கொண்டார். பின்னர் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானதொண்டர்களுக்கும் கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தனது பிறந்தநாளை பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டாம் என்று ஜெயலலிதா ஏற்கனவேகேட்டுக் கொண்டிருந்த காரணத்தால் ரத்ததானம், அன்னதானம், இலவச ஆடைகள் வழங்குதல்போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதிமுகவினர் கொண்டாடினர்.

பல்வேறு கோவில்களிலும் ஜெயலலிதா பெயரில் சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகளையும்அதிமுகவினர் நடத்தினர்.

முன்னதாக இன்று காலை சென்னை காளிகாம்பாள் கோவிலில் அமைச்சர் பொன்னையன் தங்கத்தேர்இழுத்தார். பின்னர் 500 பேருக்கு இலவச வேட்டி, சேலைகளையும் அவர் வழங்கினார்.

இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு,,,:

இதற்கிடையே ஜெயலலிதா பிறந்தநாளான இன்று சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அரசுமருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்க சட்ட அமைச்சர்ஜெயக்குமார் ஏற்பாடு செய்துள்ளார்.

அது தவிர இலவச சேலை, வேட்டிகளையும் வழங்குகிறார் ஜெயக்குமார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+