சீனா நில நடுக்கம்-257 பேர் பலி-: ஷில்லாங்கிலும் அதிர்வு
பெய்ஜிங்:
சீனாவில் இன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் பள்ளிக் குழந்தைகள் உள்பட 257 பேர்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதற்கிடையே சீன எல்லையில் உள்ள மேகாலயத் தலைநகரான ஷில்லாங்கிலும் லேசானநிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வட மேற்கு சீனாவில் உள்ள ஜியாஷி நகரின் அருகே இன்று காலை (இந்திய நேரப்படி) 7.30மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக இது பதிவாகி இருந்தது.
கிர்கிஸ்தான் நாட்டு எல்லையை ஒட்டி ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இதுவரை நூற்றுக்கும்மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளது உறுதியாகி உள்ளது. மேலும் 1,000க்கும் அதிகமான மக்கள்படுகாயமடைந்துள்ளனர்.
சாவு எண்ணிக்கையும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டேஉள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், பள்ளிகளும் இடிந்துள்ளன. இதில் பள்ளிக்குழந்தைகள் இறந்தன. ஏராளமான மக்கள் இடிபாடிகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடிவருகின்றனர்.
சீனாவின் பாலைவனப் பகுதிகளிலும் நிலநடுக்கம் பாதித்துள்ளது.
நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன என சீனாவின் ஜின்-ஹூவா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
ஷில்லாங்கில்...
ஷில்லாங்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 2.5 என்ற அளவுக்கு நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.மாலை 4.06 மணிக்கு இந்த நடுக்கம் ஏற்பட்டது. ஆனால், உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
-->