ஓகேனக்கலில் வீரப்பன்?- அதிரடிப்படையினர் முற்றுகை
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கல் மலைப் பகுதியில் சந்தனக் கடத்தல் வீரப்பன் பதுங்கியிருப்பதாகவந்த தகவலையடுத்து அங்கு தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
ஓகேனக்கல் மலைப் பகுதியில் உள்ள ஊத்துமலை என்ற இடத்தில் வீரப்பன் நடமாட்டம் இருப்பதாகஅதிரடிப்படைக்கு ரகசியத் தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப்படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.ஏராளமான காவலர்களுடன் அதிரடிப்படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
காவல் துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. நடராஜன், ஐ.ஜி. ராஜேந்திரன், தர்மபுரி மாவட்டகாவல் துறைக் கண்காணிப்பாளர் பெரியய்யா உள்ளிட்ட அதிகாரிகள் கர்நாடக அதிரடிப்படைஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் ஓகேனக்கல் மலைப் பகுதி கிராம மக்களிடம் காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும்அதிரடிப்படையினர் கோரியுள்ளனர். இது தொடர்பாக கிராம மக்களுடன் ஆலோசனைக் கூட்டமும்நடந்தது.
-->