ஹிமாச்சல், 3 வட-கிழக்கு மாநிலங்களில் நாளை தேர்தல்
டெல்லி:
ஹிமாச்சல் பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 4 மாநிலங்களிலும் நாளை சட்டமன்றத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்கிறது.
ஹிமாச்சல் தவிர்த்த 3 வட கிழக்கு மாநிலங்களிலும் பல தீவிரவாத அமைப்புகள் தேர்தலைப் புறக்கணிக்கமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான மத்தியப் படைகள் குவிக்கப்பட்டு தேர்தல்நடத்தப்பட உள்ளது.
ஹிமாச்சலில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுக்ராமின் ஹிமாச்சல் விகாஸ் கட்சிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு தந்துவந்த சுக்ராமின் ஹிமாச்சல் விகாஸ்கட்சி இப்போது தனித்துப் போட்டியிடுகிறது.
திரிபுராவில் ஆளும் காங்கிரசுக்கும் இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
நாகாலாந்தில் காங்கிரஸ் கட்சிக்கும் நாகாலாந்து மக்கள் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.நாகாலாந்தில் தீவிரவாதிகளின் மிரட்டலையடுத்து தலைநகர் கொகிமாவில் ஊரடங்கு உத்தரவுஅமலாக்கப்பட்டுள்ளது.
மேகாலயாவில் மலை மக்கள் ஜனநாயகக் கட்சி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது.
-->












Click it and Unblock the Notifications