செக்ஸ் புகார்: பழனி மகளிர் கல்லூரி முதல்வரிடம் விசாரணை
பழனி:
பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் அரசுக் கலைக் கல்லூரி மாணவிகளை கல்லூரி நிர்வாகமே பாலியல்ரீதியில் தவறாகப்பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரித்து வரும் குழு கல்லூரி முதல்வர் சந்திரகாந்தா உள்ளிட்டேரிடமும் விசாரணைநடத்தியது.
கல்லூரிக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஆய்வுக்கு வந்திருந்த குழுவினரை மகிழ்விக்க மாணவிகளைக்கட்டாயப்படுத்தி செக்ஸில் ஈடுபடுத்தியதாக கல்லூரி நிர்வாகத்தின் மீது மாணவிகளே புகார் கூறியுள்ளனர்.
இந்தப் பிரச்சினைக்கு நியாயம் கிடைக்காதவரை கல்லூக்குப் போக மாட்டோம் என்றும் கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களுக்கு ஆதரவாக பிற கல்லூரி மாணவர்களும் போராட்த்தில் குதித்துள்ளனர்.
இதையடுத்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி (டி.ஆர்.ஓ.) தலைமையில் விசாரணைக் குழுவை மாவட்ட ஆட்சித் தலைவர்அமைத்துள்ளார். இதில் மருத்துவத்துறையின் பெண் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த விசாரணைக் குழுவினர் இரு நாட்களாக் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி முதல்வர் சந்திரகாந்தா, கல்லூரிப் பேராசியைகள்,ஊழியர்கள் மற்றும் மாணவிகளிடமும் தனித்தனியே விசாரணை நடத்தினர்.
விசாரணை நடந்த டி.ஆர்.ஓ. அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏராளமான மாணவிகளும், இந்தியமாணவர் சங்கப் பிரதிநிதிகளும், பெற்றோர்களும், பொதுமக்களும் ஏராளமான அளவில் அங்கு குழுமியிருந்தனர்.
கிட்டத்தட்ட 35 மாணவிகளும், 6 பெற்றோர்களும் அதிகாரிகளிடம் சாட்சியமளித்தனர்.
பின்னர் இந்தக் குழுவினர் கல்லூரி முதல்வரின் அறை, மாணவிகள் விடுதியையும் பார்வையிட்டனர். எந்த மாணவியின் பெயரையும்வெளியிட மாட்டோம் என்று கூறி இந்த விசாரணையை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
முதல்வர் சந்திரகாந்தா மதுரை மாநகர மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் ராஜன் செல்லப்பாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.சந்திரகாந்தா இதற்கு முன் மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி முதல்வராக இருந்தபோதும் இதே போன்ற ஒரு பிரச்சினையில்சிக்கினார் என்பது நினைவுகூறத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications