இதை முன்பே செய்திருக்கலாம்: தேர்தல் கமிஷனுக்கு கருணாநிதி சூடு
சென்னை:
சாத்தான்குளம் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டதாக தேர்தல் ஆணையம் கூறியிருப்பதுதாமதமாகக் கிடைத்துள்ள நீதியாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் மணவழகர் மன்ற விழாவில் கருணாநிதி பேசுகையில்,
சில விஷயங்கள் நாட்டில் தாமதமாக நடப்பதுண்டு. அதுபோலவே சாத்தான்குளம் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வழங்கியஉறுதிமொழிகள் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று எதிர்க்கட்சிகள் பலமுறை கூறியும் கூட மிகவும் தாமதமாக தனது முடிவைஅறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
காலையில் தேர்தல் என்றால், மாலையில் கண்டனம் தெரிவிக்கிறார்கள். இதை முன்பே செய்திருந்தால் சாத்தான்குளம் மக்கள் உண்மைநிலையைப் புரிந்து கொண்டு வாக்களிக்க ஏதுவாகியிருக்கும்.
எனவே இது தாமதமான நீதி, தடுக்கப்பட்ட நீதி என்றே எடுத்துக் கொள்ள முடியும். இனிமேலாவது தேர்தல் ஆணையம் இது போன்றவிஷயங்களில் முன் கூட்டியே செயல்படும் என்று நம்புகிறேன் என்றார்.
-->