மதுரை கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் உள்ள சில கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

மதுரை அரசு மருத்துவமனைக்கு சமீபத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மருத்துவமனையே அல்லோலப்பட்டது. இதனால்நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். ஆனால், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.

இந் நிலையில் கல்லூரிகளுக்கு மிரட்டல் வந்துள்ளது. மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தியாகராஜர் கல்லூரியின் முதல்வருக்கு ஒருகடிதம் வந்தது.

அதில் விரைவில் கல்லூரிக்குள் குண்டு வெடிக்கும். அந்த டைம் பாம் கல்லூரியில் வைக்கப்பட்டுவிட்டது என்று கூறப்பட்டிருந்தது.

இதே போன்ற ஒரு கடிதம் மதுரைக் கல்லூர முதல்வருக்கும் வந்தது. கல்லூரியில் சில வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும்எந்த நேரத்திலும் அவை வெடிக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து இரு கல்லூரி முதல்வர்களும் போலீசாருக்குத் தகவல் தந்தனர். மோப்பநாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் சகிதம் போலீசார்இரண்டு கல்லூகளிலும் தீவிர சோதனை நடத்தினர்.

இச் சோதனைகளையடுத்து மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதனால் இரு கல்லூரிகளிலும் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

தீவிர சோதனை நடத்தியும் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து தான் போலீசார் நிம்மத் பெருமூச்சு விட்டனர்.

மாணவர்களில் யாரோ தான இந்த புரளியைக் கிளப்பி விட்டிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.

விசாரணை நடந்து வருகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+