கோபால் எங்கே?: மூத்த பத்திரிக்கையாளருக்கு போலீஸ் தொல்லை
சென்னை:
நக்கீரன் பத்திரிக்கை ஆசியர் கோபால் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் சின்னக்குத்தூசியிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
நக்கீரன் தொடங்கப்பட்ட நாள் முதலே அந்தப் பத்திரிக்கையில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார்.
கோபாலுக்கு நெருக்கமான நண்பர். திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களால் பெரிதும் மதிக்கப்படுபவர்.
தமிழகத்தின் மிக மூத்த பத்திரிக்கையாளரான சின்னக்குத்தூசி என்ற ஆர்.தியாகராஜன் இளம் பத்திரிக்கையாளர்களுக்கு மாதிரியாகவும்இருந்து வருபவர். திருவல்லிக்கேணியில் அறை எடுத்துத் தங்கியுள்ள மிக எளிமையான நபர்.
நேற்று இவரது அறைக்குச் சென்ற போலீஸார் திடீரென்று அவரிடம் கேள்விகள் கேட்டு குடைந்தனர்.
கோபாலின் இருப்பிடம் குறித்து அறிவதற்காக வந்ததாகக் கூறிய போலீசார் அவரது அறையைக் குடைய முயன்றனர். ஆனால், நான் ஒருபத்திரிக்கையாளன், ஆயிரம் பத்திரிகைக்கு எழுதுவேன். அதற்காக அதன் எடிட்டர் எங்கு இருக்கிறார் என்று நான் தெரிந்து வைத்திருக்கவேண்டிய அவசியமோ, தேவையோ எனக்கு இல்லை என்று சூடாக பதில் தந்தார்.
இதையடுத்து போலீசார் இடத்தைக் காலி செய்தனர்.
அதிரடிப்படையின் உளவாளியான பக்தவச்சலம் என்ற மாணவர் தன்னை பி.பி.சி. நிருபர் என்று கூறிக் கொண்டு காட்டுக்குள் போக,அவரை வீரப்பன் அடையாளம் கண்டு கொண்டு கொன்றுவிட்டார்.
இந்தக் கொலை வழக்கில் கோபாலையும் சேர்த்து உள்ளே தள்ள போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications