ஹிமாச்சல், வடகிழக்கு மாநிலங்களில் அமைதியான தேர்தல்

Subscribe to Oneindia Tamil

சிம்லா - கொகிமா:

ஹிமாச்சல் பிரதேசத்திலும், திரிபுரா, நாலாந்து, மேகாலயா ஆகிய 3 வட கிழக்கு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று சிறிய வன்முறைச் சம்பவங்களுக்கு இடையே நடந்து முடிந்தது.

தீவிரவாதிகளின் மிரட்டல்கள், ஊரடங்கு உத்தரவுகளுக்கு மத்தியில் வட கிழக்கு மாநிலங்களில் இந்தத் தேர்தல்கள் நடந்தன.

நாகாலாந்தில் நடந்த தேர்தல் வன்முறையில் ஒருவர் இறந்தார். தீவிரவாதி ஒருவன் கண்மூடித்தனமாக சுட்டதில் சிலர் காயமடைந்தனர். இந்தமாநிலத்தில் சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலையொட்டி நாகாலாந்தில் மட்டும் 45,000 ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

மின்னணு எந்திரங்கக்ை கைப்பற்றுவது போன்ற சம்பவங்களுடன் மேகாலயாவில் தேர்தல் நடந்து முடிந்தது. இங்கு 60 சதவீத வாக்குகள்பதிவாயின.

திரிபுராவில் சுமாரர் 25,000 மத்திய ரிசர்வ் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேகாலயாவிலும் மிக பலத்தபாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இங்கு 70 சதவீத வாக்குகள் பதிவாயின.

இதனால் வாக்குச் சாவடிகளில் மக்களைவிட போலீஸ் தலைகள் தான் அதிக அளவில் காணப்படுகின்றன.

ஹிமாச்சலில் பனிப் பொழிவு மிக அதிகமாக இருந்ததால் வாக்குப் பதிவு மிக மந்தமாகவே இருந்தது. மக்கள் வெளியே வரவே முடியாதஅளவுக்கு சாலைகளில் பனி மூடிக் கிடந்தால் அதிகம் பேர் வாக்களிக்கவில்லை. இங்கு 50 சதவீத வாக்குகள் தான் பதிவாயின.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+