சென்னை மாநகராட்சி: "கராத்தே"யை அவமதித்து பேசிய திமுக உறுப்பினர் வெளியேற்றம்
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் துணை மேயர் கராத்தே தியாகராஜனைத் தரக் குறைவாகப்பேசியதாக திமுக கவுன்சிலர் ஒருவர் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டார். இதனால் அங்குபெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சியின் வழக்கமான கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தின்போதுகுடிநீர் பிரச்சனை தொடர்பாக விவாதம் நடந்தது. ஸ்டாலின் மேயராக இருந்தபோது சரியானநடவடிக்கைகள் எடுக்கப்படாததால்தான் தற்போது சென்னையில் குடிநீர்ப் பிரச்சனை எழுந்துள்ளதுஎன்று தியாகராஜன் பேசினார்.
உடனே திமுக உறுப்பினரான கிரிராஜன் குறுக்கிட்டுப் பேசுகையில், இப்படியெல்லாம் சிறுபிள்ளைத்தனமாகப் பேசாமல் பிரச்சனையைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள் என்றார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கிரிராஜன் அதோடு நிற்காமல்கராத்தே தியாகராஜன் மேயர் பதவிக்கு ஆசைப்படுகிறார் என்றும், ஸ்டாலின் அமர்ந்திருந்த மேயர்இருக்கையில் உட்கார அவருக்குத் தகுதியில்லை என்றும் பேசினார்.
இதையும் அதிமுக உறுப்பினர்கள் கடுமையாக ஆட்சேபித்தனர். இதையடுத்து திமுகஉறுப்பினர்களும் பதிலுக்குக் குரல் எழுப்பவே இரு தரப்பினரும் மாறி மாறிக் கடுமையாகத் திட்டிக்கொண்டனர்.
அப்போது கராத்தே தியாகராஜனை கிரிராஜன் மிகவும் தரக் குறைவான சொற்களால் திட்டினார்.இதனால் அதிமுக உறுப்பினர்கள் மிகவும் கொந்தளித்துப் போய் திமுகவினர் மீது பாய முயற்சித்தனர்.இதையடுத்து அவையில் மேலும் கூச்சல், குழப்பம் எழுந்தது.
கிரிராஜனை உடனே அவையை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அதிமுக கவுன்சிலர்கள்கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட தியாகராஜன், அவைக் காவலர்களை அழைத்துகிரிராஜனை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.
அவைக் காவலர்களும் விரைந்து வந்து கிரிராஜனை வலுக்கட்டாயமாக அவையை விட்டுவெளியேற்றினர்.
-->