சென்னையில் விபச்சார வேட்டை: "அழகிகள்" கூட்டம் சிக்கியது!
சென்னை:
சென்னை நகரில் நடந்த இரு வேறு விபச்சார வேட்டையில் 4 விபச்சாரப் பெண்கள் சிக்கினர். இதுதொடர்பாக முன்னாள் அரசு ஊழியர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அசோக் நகர் பகுதியில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக விபச்சாரத் தடுப்புபோலீஸாருக்குத் தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து விபச்சாரத் தடுப்பு உதவி கமிஷனர் அன்புமொழி தலைமையில் போலீஸ் படை அசோக் நகர் விரைந்தது. அங்கு சம்பந்தப்பட்ட வீட்டை மாறுவேடத்தில் போலீஸார் அணுகினர்.
வாடிக்கையாளர்கள் போல வீட்டுக்குள் நுழைந்தபோது பத்மா என்ற பெண், வெங்கட் என்பவருடன்"ஜாலி கோலத்தில்" இருந்தார். மேலும் செல்வி என்ற பெண்ணுடன் சந்தோஷமாக இருப்பதற்காகதிரைப்பட தயாரிப்பு மேலாளரான ஜெயராஜ் மற்றும் விஜயன் ஆகியோர் "ரேட்" பேசிக்கொண்டிருந்தனர்.
இவர்களுக்கெல்லாம் தலைவர் போல ராமசாமி என்பவர் காணப்பட்டார். இவர் ஒரு முன்னாள்வணிகவரித் துறை நேர்முக உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாறு வேடத்தில் சென்ற போலீஸார் அத்தனை பேரையும் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.அந்த வீட்டிலிருந்து ஏராளமான ஆணுறைகள், ஆபாச சிடிக்கள், கேசட்டுகள் ஆகியவைகைப்பற்றப்பட்டன.
இதேபோல ருக்மணி, மஞ்சு ஆகிய இரு விபச்சாரப் பெண்களை நீலாங்கரை பங்களாக்களில்விபச்சாரம் செய்வதற்காக அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர் லட்சுமணன் மற்றும் ஞானவேல்ஆகியோரை பாரிமுனை பஸ் நிலையம் அருகே வைத்து போலீஸார் கைது செய்தனர். இருபெண்களும் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் பூட்டிய வீட்டுக்குள்...
இந்நிலையில் கோயம்புத்தூரில் பூட்டிய வீட்டுக்குள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 2 அழகிகளைப்போலீசார் கைது செய்தனர்.
இவர்களை ஏற்பாடு செய்திருந்த புரோக்கர் ராஜன் எப்போதும் அந்தப் பெண்களை வீட்டுக்குள்வைத்து வெளிப்பக்கமாகப் பூட்டி விட்டுச் சென்று விடுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் ராஜன்போலீசாரிடம் மாட்டிக் கொண்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
இதனால் பிரேமா மற்றும் சங்கீதா ஆகிய இரண்டு பெண்களும் பூட்டப்பட்ட வீட்டுக்குள் மாட்டிக்கொண்டனர். இரண்டு நாட்கள் சமாளித்த பெண்கள், அடுத்த நாள் பசி தாங்க முடியாமல் ஜன்னல்கதவுகளைத் திறந்து கூக்குரலிட்டுள்ளனர்.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து அந்தப் பெண்களை மீட்டனர். அதன் பின்னர்நடத்திய விசாரணையின்போதுதான் அவர்கள் பூட்டிய வீட்டுக்குள் விபச்சாரம் நடத்தியது தெரியவந்தது.
இரு பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
-->