போலீஸ் மீது குண்டுகளை வீசித் தப்பிய ரெளடி கும்பல்
மதுரை:
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது வெடிகுண்டுகளை வீசி விட்டுத் தப்பியரெளடிக் கும்பலை மதுரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை அருகே உள்ள துவரிமான், இரட்டை வாய்க்கால் பகுதியில் நாகமலை புதுக்கோட்டைபோலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு ஆட்டோ படு வேகமாக வந்து கொண்டிருந்தது. போலீஸார் நிறுத்துமாறு கோரியும்ஆட்டோ நிற்கவில்லை. போலீஸாரை நெருங்கியதும் ஆட்டோவில் இருந்தவர்கள் போலீஸார் மீதுவெடிகுண்டுகளை வீசினர்.
இதையடுத்து போலீஸார் ஆட்டோவைத் துரத்திச் சென்று வளைத்துப் பிடித்தனர். ஆனால்ஆட்டோவில் இருந்தவர்கள் தப்பி விட்டனர். ஆட்டோ டிரைவர் ரவிச்சந்திரன் மட்டும் பிடிபட்டார்.ஆட்டோவில் அரிவாள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
ஆட்டோவில் வந்தவர்கள் பயங்கர ரெளடிகள் என்றும் காளவாசல், ஆரப்பாளையம் பகுதிகளைச்சேர்ந்தவர்கள் என்றும் ஆட்டோ டிரைவர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
வெடிகுண்டு வீசியதில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு காயமடைந்தார்.
-->