குடிகார கணவனை உலக்கையால் அடித்துக் கொன்ற பெண்!
கோயம்புத்தூர்:
குடித்து விட்டு தினசரி கொடுமைப் படுத்தி வந்த கணவரை உலக்கையால் அடித்துக் கொன்றுசாக்கடையில் வீசிய பெண் பின்னர் போலீஸில் சரணடைந்தார். கோயம்புத்தூரில் இந்த பயங்கரசம்பவம் நடந்துள்ளது.
கோயம்புத்தூர்-ராமநாதபுரம் அருகே உள்ள மருதூர் சாலைப் பகுதியில் வசித்து வந்தவர்நந்தகுமார். இவர் ஒரு வளையல் வியாபாரி.
இவரது மனைவி ராஜேஸ்வரி. இவரும் சிறு சிறு பொருட்களை விற்று வருகிறார். இந்தத்தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
நந்தகுமார் தினசரி குடித்து விட்டு வருவது வழக்கம். இதனால் அவருக்கும் ராஜேஸ்வரிக்கும்இடையே தினமும் சண்டை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் வழக்கம் போல குடித்து விட்டு வந்த நந்தகுமார், தன் மனைவியுடன் தகராறுசெய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி வீட்டில் இருந்து உலக்கையால் நந்தகுமாரைஅடித்துக் கொன்றார்.
பின்னர் அருகில் ஓடும் சாக்கடையில் பிணத்தைத் தூக்கிப் போட்டு விட்டு அமைதியாக இருந்துவிட்டார் ராஜேஸ்வரி.
காலையில் சாக்கடையில் பிணம் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிஅடைந்து, ராஜேஸ்வரியிடம் வந்து விசாரிக்க ஆரம்பித்தனர்.
இதைத் தொடர்ந்து போலீஸில் சரணடைந்தார் ராஜேஸ்வரி. அவரைக் கைது செய்து போலீசார்விசாரித்து வருகின்றனர்.
-->