""பண பலம் வென்றது; மக்கள் தோற்று விட்டனர்"": இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அதிமுகவினர் பணத்தை வாரி இறைத்துதான் வெற்றிபெற்றுள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சாத்தான்குளம் தேர்தலில் அதிமுகவினரின் பண பலமும், கயமைத் தனமும், அதிகாரத்துஷ்பிரயோகமும்தான் வெற்றி பெற்று கொக்கரிக்கின்றன. ஆனால் இதில் மக்கள் தோற்றுப் போய்நிற்கிறார்கள்.

இந்த முடிவைப் பார்த்து நீதியும் நேர்மையும் தலைகுனிந்து நிற்கின்றன. "தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும். ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும்" என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

சாத்தான்குளத்தில் அதிமுக பெற்றுள்ள வெற்றி உண்மையான வெற்றியே அல்ல. இந்தத் தீயஆட்சியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். தமிழகத்தில் அதிமுக ஆட்சியைமுடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியிலும் காங்கிரஸ் ஈடுபடும்.

அதிமுகவினரின் பணபலத்திற்கு மயங்காமல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போட்டவாக்காளர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த அனைவருக்கும்நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாத்தான்குளத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மக்கள்பணியாற்றி வரும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் இளங்கோவன்.

வெறிச்சோடிய சத்தியமூர்த்தி பவன்:

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைமை அலுவலகமானசத்தியமூர்த்தி பவன் வெறிச்சோடிக் காணப்பட்டது.

காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர் கூட அங்கு காணப்படவில்லை. நிருபர்கள் அங்கு சென்றபோதுஅவர்களை வரவேற்கக் கூட ஒருவரும் இல்லை.

மயான அமைதியுடன் உறைந்து போயிருந்தது சத்தியமூர்த்தி பவன்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+