ஹிமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க. படுதோல்வி
டெல்லி:
ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. தேர்தலையொட்டி அயோத்தி பிரச்சனையைக் கையில்எடுத்த பா.ஜ.க. படுதோல்வி அடைந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 26ம் தேதி ஹிமாச்சலப் பிரதேசம், நாகலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா ஆகியநான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு அங்குவாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 68 தொகுதிகள் உள்ளன. ஆனால 65 தொகுதிகளில் மட்டுமேதேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாகஉருவெடுத்துள்ளது.
பா.ஜ.கவுக்கு 16 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அயோத்தி விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இம்மாநிலத்தில் பா.ஜ.க. தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேகாலயா:
மேகாலயா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கே அதிக இடங்கள் கிடைத்துள்ளன. முடிவுகள்வெளியான 45 இடங்களில் 16 இடங்கள் காங்கிரசுக்குக் கிடைத்துள்ளன.
அவற்றின் கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து 25 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளன. காங்கிரஸ்தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது.
எதிர்க் கட்சியான பா.ஜ.கவுக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இங்கு மொத்தம் 60தொகுதிகள் உள்ளன.
திரிபுராவில்...
திரிபுராவில் இடதுசாரிக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ளன. இந்தக்கூட்டணிதான் ஆட்சி அமைக்கவுள்ளது.
மொத்தமுள்ள 60 தொகுதிகளில், இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 53 முடிவுகளின்படிபார்க்கும்போது இடதுசாரிக் கூட்டணி 35 இடங்களைப் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாகமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 32 தொகுதிகளை வென்றுள்ளது.
நாகலாந்தில்...
நாகலாந்தில் தொங்கு சட்டசபை என்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 55 இடங்களில் மட்டும் தேர்தல் நடந்தது. இதுவரை 35தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்களும், நாகலாந்து மக்கள் முன்னணி கட்சிக்கு 13 இடங்களும்கிடைத்துள்ளன. பா.ஜ.க. 3 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
-->