For Daily Alerts
Just In
வாஜ்பாயுடன் ரணில் சந்திப்பு
டெல்லி:
பிரதமர் வாஜ்பாயை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று சந்தித்துப் பேசினார்.
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரணில் இன்று காலை வாஜ்பாயைச் சந்தித்துப் பேசினார்.சுமார் ஒரு மணி நேரம் வரை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் குறித்துவாஜ்பாயும், ரணிலும் விரிவாக விவாதித்தனர்.
சந்திப்பிற்குப் பின்னர் வாஜ்பாய் அளித்த மதிய விருந்தை ரணில் ஏற்றுக் கொண்டார்.
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்துஅவர் வாஜ்பாயிடம் விளக்கிக் கூறியுள்ளதாகவும் தெரிகிறது.
Story first published: Saturday, March 1, 2003, 5:30 [IST]