பாம்பனிலிருந்து இலங்கைக்கு தப்ப முயன்ற 3 தமிழ் அகதிகள்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அருகேயுள்ள பாம்பன் பகுதியிலிருந்து இலங்கைக்கு படகில் தப்ப முயன்ற 3 தமிழ்அகதிகளை சுங்கத் துறையினர் பிடித்து பாம்பன் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
சுங்கத் துறை அதிகாரிகள் பாம்பன் கடல் பாலம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஒரு படகில் சிலர் ஏறிக் கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்தபோது அந்தப் படகு வேகமாகக் கடலுக்குள் சென்றது. ஆனால் சுங்கத்துறையினர் அந்தப் படகைத் துரத்தி, அதில் இருந்த மூன்று பேரைப் பிடித்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது மூன்று பேரும் இலங்கைத் தமிழ் அகதிகள் என்று தெரிய வந்தது.இலங்கைக்கு அவர்கள் தப்பிச் செல்ல முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து மூன்று பேரையும் பாம்பன் போலீசாரிடம் சுங்கத் துறையினர் ஒப்படைத்தனர்.
-->












Click it and Unblock the Notifications