சென்னையில் ஷெகாவத்துக்கு திடீர் உடல் நலக் குறைவு
சென்னை:
சென்னை வந்துள்ள துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத்துக்கு திடீர் உடல் நலக் குறைவுஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை ஓய்வெடுத்துக் கொள்ளும்படி டாக்டர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
"கலாஷேத்ரா" நிறுவனரான ருக்மணி அருண்டேலின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காகஷெகாவத் சென்னை வந்துள்ளார்.
முன்னதாக நேற்று இரவு சென்னையில் உள்ள ராஜஸ்தானிய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நடத்தியபாராட்டு விழாவில் ஷெகாவத் கலந்து கொண்டார்.
இந்நிலையில் இன்று காலை திடீரென்று அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை டாக்டர்கள் சோதித்தனர். அப்போது அவருக்கு உயர் ரத்த அழுத்தம்ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்த அலைச்சல் காரணமாகவே ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்று கூறிய டாக்டர்கள்,பிற்பகல் வரை எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டாம் என்றும், நன்றாக ஓய்வெடுத்துக்கொள்ளுமாறும் அவருக்கு அறிவுறுத்தினர்.
இதையடுத்து அருண்டேல் நூற்றாண்டு விழாவில் ஷெகாவத் கலந்து கொள்ளவில்லை.
கடந்த வாரத் துவக்கத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தின்போது ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம்உரையின் இந்தி மொழியாக்கத்தை வாசித்துக் கொண்டிருந்தபோது ஷெகாவத் திடீரென்று மயங்கிவிழுந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications