For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லை அருகே நேருக்கு நேர் வந்த 2 ரயில்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

திருநெல்வேலி அருகே 2 பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதவிருந்தன. ஆனால் இருடிரைவர்களின் சாமர்த்தியத்தாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து நேற்று மாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்வழக்கம்போல் சென்னைக்குக் கிளம்பிச் சென்றது.

தாழையூத்து அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்த் திசையில் குருவாயூரில் இருந்துதிருநெல்வேலிக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் வந்தது.

ஆனால் இந்த இரண்டு ரயில்களும் செல்லும் தண்டவாளப் பாதைகள் மாற்றப்படாததால் இரண்டும்நேருக்கு நேர் வரத் தொடங்கின. இதனால் பெரும் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

இருந்தாலும் இரண்டு ரயில்களின் டிரைவர்களுமே நிலைமையை உணர்ந்து சாமர்த்தியமாகச்செயல்பட்டு ரயில்களை பிரேக் போட்டு நிறுத்தினர். ஒரு டிரைவர் சரியாகக் கவனிக்காமல்இருந்திருந்தாலும் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.

இதையடுத்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே உயர்அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X