சாத்தான்குளம்: "கப்சிப்" ஆன காங்கிரஸ் வேட்பாளர்!
தூத்துக்குடி:
சாத்தான்குளம் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தபோது காங்கிரஸ்வேட்பாளர் மகேந்திரன் கடைசி வரை வாக்கு எண்ணும் இடத்திற்கு வரவே இல்லை.
வாக்கு எண்ணிக்கை நேற்று டந்தது. இதன் முடிவில் அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணம் 17,492வாக்குகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றார்.
காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு 11 மணிக்கெல்லாம் முடிவடைந்து விட்டது.
ஆனால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மகேந்திரன் அங்கு வரவில்லை. அதிமுகவேட்பாளர் தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்ததையடுத்து காங்கிரஸ் ஏஜென்டுகளும்ஒவ்வொருவராகக் கிளம்ப ஆரம்பித்தனர்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் ஏஜென்டுகள் ஒருவரையுமே காணவில்லை.
முன்னதாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்துக்கு நீலமேகவர்ணம் வந்தபோது அவரிடம்அடையாள அட்டை இல்லாத காரணத்தால் அவரை உள்ளே அனுமதிக்க போலீசார் மறுத்தனர்.பின்னர் ஒரு வழியாக அவர் உள்ளே நுழைந்தார்.
தேர்தல் கமிஷன் மற்றும் போலீசார் கெடுபிடி காரணமாக அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகபிரமுகர்கள் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியிலேயே நின்று கொண்டிருந்தனர்.
-->