For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா-பாக். கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப மதுரை தியேட்டர்களில் தடை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை நேரடிஒளிபரப்பு செய்ய மதுரை தியேட்டர்களில் திடீர் தடை விதிக்கப்பட்டது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிய நாளிலிருந்தே பல சினிமா தியேட்டர்களில்அவை நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வந்தன.

அதன்படி மதுரையில் ராம் விக்டோரியா, ஜீவா, கணேஷ் உள்ளிட்ட தியேட்டர்களில் இந்தியாபங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பாகி வந்தன. நேற்றும் இந்திய-பாகிஸ்தான்அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப இந்தத் தியேட்டர்கள் ஏற்பாடுசெய்திருந்தன.

ஆனால் பொது இடங்களில் இதுபோன்ற போட்டிகளை ஒளிபரப்புவதால், முக்கியமாகஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியை ஒளிபரப்புவதால் சட்டம்-ஒழுங்குப்பிரச்சனை ஏற்படலாம் என்று போலீசார் கருதினர்.

இதையடுத்து இந்தத் தியேட்டர்களில் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப போலீசார் தடைவிதித்தனர்.

அதேபோல் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கடைகள், டீ கடைகள், டி.வி. விற்கும் கடைகள்ஆகியவற்றில் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப போலீசார் தடை விதித்தனர்.

இதற்கிடையே சென்னையில் சாத்தான்குள இடைத் தேர்தல் முடிவை விட நேற்று இந்திய கிரிக்கெட்அணி பெற்ற வெற்றிதான் பெரிதும் பேசப்பட்டது.

சாத்தான்குளத்தில் அதிமுக வெற்றி பெற்ற செய்தியை இந்திய வெற்றி மூழ்கடித்து விட்டது.

சென்னையில் மெரீனா கடற்கரை உள்ளிட்ட பல பொது இடங்களில் இந்தக் கிரிக்கெட் போட்டிஒளிபரப்பப் பட்டது. இதனால் இரவு 10 மணி வரை இந்தப் பகுதிகள் முழுவதுமே விழாக் காலம்பூண்டிருந்தன.

இந்திய அணி வெற்றி பெற்றதும் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X