For Daily Alerts
Just In
பாண்டிச்சேரி சபாநாயகர் தேர்வை எதிர்த்த மனு தள்ளுபடி
சென்னை:
பாண்டிச்சேரி சபாநாயகர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதுசெல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுதள்ளுபடி செய்யப்பட்டது.
பாண்டிச்சேரி எம்.எல்.ஏவான வி.எம்.சி. சிவக்குமார் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
சபாநாயகர் தேர்தலில் ராமச்சந்திரனை எதிர்த்து போட்டியிட்டுத் தோற்றவர் இவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன், தனது அதிகார வரம்புக்குள் இந்தப்பிரச்சினை வரவில்லை என்பதால் வழக்கைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
-->
Comments
Story first published: Sunday, March 2, 2003, 5:30 [IST]