விபச்சாரப் பெண்ணிடம் நகை, பணத்தை பறிகொடுத்த ஆந்திர அரசு அதிகாரி
சென்னை:
ஆந்திராவிலிருந்து பணி நிமித்தம் சென்னை வந்த அரசு அதிகாரி விபச்சாரப் பெண்ணிடம்ஜாலியாக இருந்து விட்டு அந்தப் பெண்ணிடமே தனது நகை, பணம், அரசு ஆவணங்களைப்பறிகொடுத்தார்.
ஆந்திர மாநில அரசுப் பணியில் இருப்பவர் நாராயணன். இவர் பணி நிமித்தம் காரணமாக சென்னைவந்திருந்தார். புரசைவாக்கம் பகுதியில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தார் அவர்.
அப்போது அவர் தனக்கு ஏற்கனவே அறிமுகமான ரீட்டா என்ற விபச்சாரப் பெண்ணைத் தொடர்புகொண்டு ஆள் கேட்டுள்ளார். அவரும் ஒரு பெண்ணை அனுப்பினார்.
அந்தப் பெண்ணுடன் "சந்தோஷமாக" இருந்த நாராயணன் நன்கு தூங்கி விட்டார். காலையில்விழித்துப் பார்த்தபோது தனது கையில் இருந்த பிரேஸ்லெட், கழுத்தில் கிடந்த சங்கிலி,கைக்கடிகாரம், ரூ.60,000 பணம், கிரடிட் கார்டு, சில அரசு ஆவணங்கள் ஆகியவற்றைக் காணாமல்திடுக்கிட்டார்.
இரவு வந்த பெண்தான் இவற்றைத் திருடியிருக்க வேண்டும் என்று கருதிய அவர் என்னசெய்வதென்று புரியாமல் விழித்தார்.
வேறு வழியில்லாமல் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தார் நாராயணன்.போலீஸாரும் இது தொடர்பாக விசாரணையில் இறங்கினர்.
பெண்ணை அனுப்பிய புரோக்கர் ரீட்டாவை போலீஸார் விசாரித்தபோது அந்தப்பெண்ணின்முகவரி கிடைத்தது. ஆனால் அங்கு சென்று பார்த்தபோது அந்தப் பெண் அங்கிருந்துஏற்கனவே தப்பிவிட்டது தெரிய வந்தது.
தப்பியோடிய அந்தப் பெண்ணை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.
-->