கொழும்பு-கொச்சி இடையே புதிய விமான சேவை
கொச்சி:
இலங்கையின் "ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ்" வரும் ஏப்ரல் 22ம் தேதி கொழும்பிலிருந்து கொச்சிக்குவிமான சேவையைத் தொடங்குகிறது.
"ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ்" நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் விமான சேவைகளை நடத்தி வருகிறது.கொழும்பிலிருந்து டெல்லி, மும்பை, கயா, பெங்களூர், திருச்சி, சென்னை மற்றும்திருவனந்தபுரத்திற்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 22ம் தேதி முதல் கொச்சிக்கும் ஒரு விமானத்தை இயக்க "ஸ்ரீலங்காஏர்லைன்ஸ்" முடிவு செய்துள்ளது.
ஏர்பஸ் ஏ320 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் ஒவ்வொரு செவ்வாய், வியாழன் மற்றும்வெள்ளிக்கிழமைகளில் கொச்சிக்கும் கொழும்புக்கும் இடையே இயக்கப்படும்.
செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கொழும்பை விட்டு காலை 8.10 மணிக்குக் கிளம்பும்இந்த விமானம் காலை 9.40 மணிக்கு கொச்சி வந்து சேரும். அதேபோல வெள்ளிக்கிழமைகளில்காலை 9 மணிக்குக் கிளம்பும் விமானம் காலை 10 மணிக்கு கொச்சியை வந்தடையும்.
மேலும் கொச்சியிலிருந்து செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 10.15 மணிக்குப்புறப்படும் இந்த விமானம் பகல் 12.05 மணியளவில் கொழும்பை சென்றடையும்.வெள்ளிக்கிழமைகளில் காலை 11.50 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 1.40 மணிக்கு கொழும்புசென்று சேரும்.