மதுரை பல்கலையில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ. மாணவர்களின் தகிடுதித்தங்கள்
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் "பிட்" அடித்தது உள்பட பல்வேறு தேர்வு விதிமுறைகளைமீறிய 2 எம்.பி.ஏ. மற்றும் 6 எம்.சி.ஏ. மாணவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் பல்வேறு படிப்புகளைஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவற்றில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ.ஆகிய முக்கியப் படிப்புகளும் அடங்கும்.
தேர்வு விதிமுறைகளில் ஈடுபடும் மாணவ, மாணவிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்என்று இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பொன்னுச்சாமி சமீபத்தில்தான் எச்சரிக்கைவிடுத்திருந்தார்.
இந்நிலையில் கம்ப்யூட்டர் படிப்பான எம்.சி.ஏவுக்கான தேர்வின் போது மூன்று மாணவர்கள்தங்களுடைய கூடுதல் விடைத் தாள்களில் குளறுபடி செய்திருந்தனர்.
அதாவது அவர்கள் எழுதிக் கொண்டு வந்திருந்த விடைத் தாள்களை பிரதான விடைத் தாள்களுடன்இணைத்துக் கொடுத்திருந்தனர்.
இவற்றை பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுபிடித்தது. இதைத் தொடர்ந்து அந்த மூன்று மாணவர்களும்அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தேர்வுகளை எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் தேர்வில் "பிட்" அடித்த மூன்று எம்.சி.ஏ. மாணவர்களும் பிடிபட்டனர்.
இந்நிலையில் எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்களில் ஒருவருடைய ஆய்வறிக்கையை (project report)திருத்தியபோது அது ஏற்கனவே முந்தைய ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட வேறு ஒருவரின்ஆய்வறிக்கையைப் போலவே இருந்தது.
சந்தேகப்பட்டு மேலும் உற்றுப் பார்க்கும் போதுதான் அது அப்படியே ஜெராக்ஸ் எடுத்துசமர்ப்பிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதே போல் மற்றொரு எம்.பி.ஏ. மாணவரும் முந்தைய ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டஆய்வறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து சமர்ப்பித்திருந்தார்.
இந்த மோசடியைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய பல்கலைக்கழக ஒழுங்குநடவடிக்கைக் குழுவினர் மீண்டும் அந்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டனர்.
இதற்கிடையே இரண்டு மாணவிகளின் விடைத் தாள்கள் ஒரே கையெழுத்தில் இருப்பதும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினர் முன் அந்தமாணவிகள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications